ரோமாபுரியின்
சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலி] அவர்களுக்கு ஒரு
கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும்
கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத
பகுதி எது ?
2, தந்தை
இல்லாதவர் யார் ?
3, குடும்ப
பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை
அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில்
படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள்
:- ஒன்று
முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள
எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
இவ்வாறு
கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா [ரலி] அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலி]
அவர்களுக்கு
அனுப்பினார்கள்.
அருமை நாயகம் [ஸல்] அவர்களால் “திருக்குர்ஆனின் விஷய ஞானத்தையும் மார்க்கத்தின்
சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143] என விஷேசமாக துஆ
செய்யப்பட்டவரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என பிரபலமாக அறியப்பட்டவருமான
பேரறிஞர் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள்
வருமாறு :-
1, கிப்லா இல்லாத பகுதி கண்ணியம் வாய்ந்த கஃபாவின்
உள்பாகமாகும்.
2,தந்தை இல்லாதவர்,ரூஹுல்லாஹ்
ஈஸா நபி [அலை] அவர்களாகும்.
3, குடும்ப
பாரம்பரியமில்லாதவர், பாவா ஆதம் [அலை] அவர்களாகும்.
4, கப்று கொண்டு
நடந்தது, ஹள்ரத் யூனுஸ் [அலை] அவர்களாகும்.
5, கருவரையில்
வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன ;
[1] நபி இஸ்மாயீல் [அலை] அவர்களுக்குப் பகரமாக குர்பானி கொடுப்பதற்காக
நபி இப்ராஹீம் [அலை] அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு.
[2] கற்பாறையிலிருந்து வெளிவந்த சாலிஹ் நபி [அலை] அவர்களின் அதி
அற்புத ஒட்டகம்.
[3] மூஸா [அலை] அவர்களின் பாம்பு.
6, சுய புத்தி
உள்ளவர் முழுமையானவர். சொல் புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர்.சொல் புத்தியும்
இல்லை. சுய புத்தியும் இல்லை. இவர் தான் ஒன்றுமே இல்லாத வஸ்து.
பின்னர், ஹள்ரத்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் [ரலி] அவர்கள் ஒரு
பாட்டிலில் நீரை நிரப்பி “இது தான் எல்லா
பொருளின் மூல வித்து” என
பதிலளித்தார்கள்.
ஏனெனில் அல்லாஹ் தன் மறையில் وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ "நீரிலிருந்து தான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம்". [அல்குர்ஆன் :21 ;30] எனக் கூறுகிறான்.
ஏனெனில் அல்லாஹ் தன் மறையில் وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ "நீரிலிருந்து தான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம்". [அல்குர்ஆன் :21 ;30] எனக் கூறுகிறான்.
நீரின்றி அமையாது உலகு.
ReplyDeleteநச் கேள்விகளும், நறுக்கு பதில்களும்.
சிந்தனையை தூண்டுகிறது