Sunday, 23 March 2014

புதிரும் பதிலும் - 3



பிரார்த்தனை ஏற்கப்படாததேன்?

ஒரு நாள் மகான் இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் பஸராவின் கடைத்தெரு வழியாக நடந்து சென்றார்கள்.அப்போது அங்கிருந்த மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு இப்படி ஒரு கேள்வி கேட்டார்கள்!

நாங்கள் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம்.அவனிடம் அதிகமாகப் பிரார்த்திக்கிறோம்.ஏனோ அல்லாஹ் எங்களின் வேண்டுதலை ஏற்றுக் கொள்வதில்லை.இது ஏன்? என்று வினவி னார்கள்.

அதற்கு இப்ராஹீம் பின் அத்ஹம் [ரஹ்] அவர்கள் அளித்த பதில் என்ன தெரியுமா? அது ஏனென்றால், உங்கள் இதயங்கள் பத்து செயல்களைக் கொண்டு மரித்துப் போய் விட்டது.

1)     அல்லாஹ்வை அறிந்துள்ளீர்கள்.ஆனால் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதில்லை.

2)      அல்லாஹ்வுடைய தூதர் நபி [ஸல்] அவர்களை நேசிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் அவர்களின் சுன்னத்தான நடைமுறைகளை விட்டு விட்டீர்கள்.

3)      குர்ஆன் ஓதுகிறீர்கள்.அதன் படி நடப்பதில்லை.

4)      அல்லாஹ்வின் அருள்கொடை [யான உணவு] களை உண்ணுகிறீர்கள்.அதற்கு நன்றி செலுத்துவதில்லை.

5)      ஷைத்தான் உங்களுடைய விரோதி எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்.ஆனால் அவனுக்கு மாறு செய்வதில்லை.

6)      சொர்க்கம் உண்மை எனச் சொல்லிக் கொண்டு அதற்காக அமல் செய்வதில்லை.

7)      நரகம் உண்மை எனச் கூறிக் கொண்டு அதை விட்டும் தப்ப வழி பார்ப்பதில்லை.

8)      மரணம் நிச்சயம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதற்காக ஆயத்தமாவதில்லை.

9)      உறக்கத்திலிருந்து விழித்ததும்,மக்களை குறை கூற ஆரம்பித்து விடுகிறீர்கள்.உங்கள் குறைகளை மறந்து விடுகிறீர்கள்.

10)  மரணமானவர்களை அடக்கம் செய்து கொண்டுதானிருக் கிறீர்கள்.ஆனால் அவர்களைக் கொண்டு படிப்பினை தான் பெறுவதில்லை.

இப்படி உங்கள் இதயம் இறந்து போயிருக்கும் போது எப்படி உங்கள் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள்.

விழித்துக் கொண்டிருக்கும் உள்ளத்திலிருந்து விழிப்பு நிலையில் கேட்கப்படும் பிரார்த்தனைகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.


Saturday, 22 March 2014

புதிரும் பதிலும் - 2 ன் தொடர்ச்சி....


பாதிரியாரிடம் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்வி.

இதுவரை பாதிரியாரிடம் போட்ட அனைத்து புதிர்களுக்கும் நல்ல புரிதல்களுடன் கூடிய பொருத்தமான பதில்களை பட்டென்று பதிலளித்த மகான் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் நிறைவாக நான் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்.அதற்கு நீங்கள் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்கள்.

Friday, 21 February 2014

புதிரும் பதிலும் -2


புதிர் போட்ட பாதிரிக்கு பாடம் புகட்டிய பிஸ்தாமி.

மகான் ஹளரத் அபூயஸீத் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் மிகப்பெரிய மெஞ்ஞானி.அல்லாஹ்வின் அருள் பெற்ற இந்த இறைநேசரிடம் ஒரு நாள் ஒரு பாதிரியார் தனது சீடர்கள் புடைசூழ பந்தாவாக வந்தார்.பிஸ்தாமி அவர்களை பயந்து பின் வாங்கச் செய்யும் பல புதிர் கேள்விகளை பாதிரியார் மிக கம்பீரமாக கேட்டார். அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதறாமல் சட்டென்று பதில் கூறி பாதிரியாரை வியக்க வைத்தார்கள் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள்.

இப்போது அந்த பாதிரியாரின் புதிர்களையும் பிஸ்தாமியின் புத்திசாலித்தனமான பதில்களையும் பார்ப்போம்!

Thursday, 23 January 2014

புதிரும் பதிலும் -1



ரோமாபுரியின் சக்கரவர்த்தி கைஸர், அமீர் முஆவியா [ரலி] அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks