Saturday 22 March 2014

புதிரும் பதிலும் - 2 ன் தொடர்ச்சி....


பாதிரியாரிடம் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்வி.

இதுவரை பாதிரியாரிடம் போட்ட அனைத்து புதிர்களுக்கும் நல்ல புரிதல்களுடன் கூடிய பொருத்தமான பதில்களை பட்டென்று பதிலளித்த மகான் பிஸ்தாமி [ரஹ்] அவர்கள் நிறைவாக நான் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்.அதற்கு நீங்கள் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்கள்.
என்ன கேள்வி யா முஹம்மது? என எடுப்பாக கேட்ட பாதிரியாரிடம், சொர்க்கத்தின் திறவுகோள் என்ன என எதார்த்தமாகக் கேட்டார்கள்.

அப்போது பாதிரி பதிலளிக்காமல் உறைந்து போய் மௌன மானார். அவர் கூட வந்திருந்த அவருடைய கிருஸ்தவ சீடர்கள் ; எங்களின் தந்தையே! நீங்கள் அவர்களிடம் இவ்வளவு கேள்விகள் கேட்டீர்கள். அதற்கு அவர்கள் உங்களுக்குப் பதிலளித்தார்கள்.இப்போது அவர்கள் உங்களிடம் ஒரு கேள்வி தானே கேட்டுள்ளார்கள்.அதற்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா? என ஆவலாய் பேசினார்கள்.

அதற்குப் பாதிரியார் ; எனது பிள்ளைகளே! நான் உங்களைத் தான் பயப்படுகிறேன் என்று தயங்கிய போது, வேண்டாம் எங்களைப் பயப்பட வேண்டாம். தாராளமாகப் பதிலளியுங்கள் என்று ஆர்வமூட்டினார்கள்.இறுதியாக பாதிரியார் அவர்கள் உறுதியாக சொன்ன பதில் என்ன தெரியுமா? சொர்க்கத்தின் திறவுகோள் لا اله الا الله محمد رسول الله   [லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்] என்பதாகும்.


இறுதியில் தேவாலயம் ஏக இறைவனாம் அல்லாஹ் வணங்கும் மஸ்ஜிதாக மாறியது.

இதன் முந்தய பகுதியைக் காண இங்கே அழுத்தவும்.

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks