Saturday 8 October 2016

புழு குழவியாகி...

குழவி, புழுவைக் கொட்டி...கொட்டி
புழு குழவியாகிவிடும்.இதைப்போல ஒரு சத்திய வாழ்க்கை  ஒரு சத்திய சொரூபம் உன்னுள் தொட்டு....கொட்டி உன்னையும் சத்தியமாக்கி விடும்.சிலருக்கு பல வருடங்கள்  சிலருக்கு ஓரிரு வருடங்கள் சிலருக்கு பார்த்த உடனே  உரசி இருந்தால் உற்று நோக்கி க்கொண்டு இருந்தால் உள்ளத்தில் பற்றிக்கொண்டு எண்ணிக்கொண்டு இருந்தால் போதும். உள்ளுக்குள் பெரும் மலர்ச்சி ஏற்பட்டுவிடும். பிறகு எந்தக் குருவும் தேவைப்படாது. அந்த சத்திய சொரூபமும் அவசியம் இருக்காது. கொட்டப்பட்ட புழு  குழவியாகி அது பாட்டுக்குப் பறந்து கொண்டிருக்கும். இன்னொரு  புழுவை ஈன்று குழவியாக்கும். ஞானி வாழ்க்கை இப்படித்தான் தொடர்கிறது.எங்கோ இருக்கும் ஞானிகளால் தான் இந்த உலகத்தின் நியதிகள் தொடர்கின்றன. என்று சொல்லப்படுகிறது.
இந்த வகையில்;ஞானிகளின் தொடர்ச்சி உலகின் மலர்ச்சி.
கொட்டப்படாத புழு குழவி ஆகாது.கொட்டும் போது வலிக்கும். வலி வந்தாலே பிரசவம். பாறைக்குள் மறைந்திருக்கும் அழகு சிற்பம் வெளிப்படவேண்டு மென்றால் உளியினால் சிற்பி கொத்திக் கொத்தி.....செதுக்கு(ம் வேதனையை )வதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் .இல்லை யென்றால் அழகு சிற்பம் சாத்தியமாகாது.ஆகவே ஷைகின்-குருவின் தர்பியத்-சத்திய சோதனை என்னும் உளியின் குத்தை உள்ளன்போடு உள் வாங்கிக்கு கொள்ளுங்கள். வலிக்காத மாதிரி அடிச்சிட்டு தூங்க வைக்கிறது  அம்மா  
வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது   அப்பா  
.இதில் ஞானியின் பாத்திரம்  அப்பா.இது ஞானியின் ஞானக்கூத்து.
     எல்லாம்  நன்மைக்கே
      ____________________
             (1)
ஹிட்லர் தோன்றியதற்கும்,வளர்ந்த தற்கும்  பிறகு அழிந்த தற்கும் இம்மாதிரி யான ஞானியர் தான் காரணம். ஹிட்லர் தோன்றியிராது போயிருந்தால்  இந்தியா வுக்கு சுதந்திரம்  கிடைக்காமல் போயிருக்கும். ஆப்ரிக்காவுக்கும் பர்மா வுக்கும் மரியாதை கிடைத்திருக்காது என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுவார்கள். ஐரோப்பியரை, ஹிட்லர் பிரம்பால் அடித்து முடமாக்கியதால் தான்  இந்த மாற்றம் புவியில் ஏற்பட்டது என்பார்கள்.அடிமை தேசம் என்று ஒன்று இப்போது இல்லவே இல்லை .இந்த ஆரோக்கியமான உன்னதமான நிலைக்கு  ஹிட்லர் காரணமாக இருந்திருப்பாரோ  இருந்திருக்கக்கு கூடும்  என்று ஞானிகள் கூறுவார்கள்.
         (2)
قال الله تعالى: 1) كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهواشيئاوهوخيرلكم وعسى ان تحبوا شيئاوهوشرلكم والله يعلم وانتم لاتعلمون  216  البقرة
                                                            2) وعاشروهن بالمعروف فأن كرهتموهن فعسى أن تكرهواشيئا ويجعل الله فيه خيرا كثيرا.
19 .النساء)
3) فان مع العسريسرا  ان مع العسر يسرا
5،6:الانشراح

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks